முதல்வரின் உரை .
தமிழக சட்டக் கல்வி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பொக்கிஷமாக விளங்கிக்கொண்டு இருக்கக்கூடியது அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர். 1979-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் பயின்ற பலபேர் நீதிபதிகள் ஆகவும், உலக அளவில் தலைசிறந்த சட்ட வல்லுனர்கள் ஆகவும், ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆகவும், புகழ் மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமையப்பெற்ற இக்கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணரவும், எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் தலைசிறந்த சட்ட வல்லுனர்கள் ஆக மாற்றும் நோக்கில் பல்வேறு குழுக்களை கொண்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன்களை வெளிக் கொண்டு வருவதே நோக்கமாகக் கொண்டுள்ள இக்கல்லூரியில் அதற்காக பிரத்யேகமாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் ஆவன மாதிரி நீதிமன்ற வழக்குவாத மன்றக்குழு, கலை மற்றும் பண்பாட்டுப் போட்டி தேர்வுகளுக்கான குழு, சட்ட அறிவுசார் குழு ஆகியவைகளாகும். மாநிலம் முழுவதிலும் உள்ள தலைசிறந்த சட்ட வல்லுனர்களை கொண்டு பேச்சு அரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களின் மூலம் மாணவர்களுக்கு சிந்தனையை தூண்டவும் சட்டக் கல்வியில் விழிப்புணர்வும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி மாணவர்களை சட்டக் கல்வி மற்றும் இதர அனைத்து செயல்களிலும் தலைசிறந்து விளங்க வைப்பதன் மூலம் இக்கல்லூரி மேன்மேலும் மிளிர்ந்து மெருகேற்றமடைகிறது. நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மூலம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் மாணவர்களால் சேவை செய்யும் வாய்ப்பு ஏற்படுவதால் இந்த சமுதாயத்தால் இவை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கப்படுகிறது. சட்டக் கல்வியோடு மட்டுமல்லாது அதற்கு அப்பாற்பட்ட நிலையில் மாணவர்களை இந்த சமுதாயத்தின் தலை சிறந்த குடிமகன்களாக மாற்றி இந்த சமுதாயத்திற்கு சேவை செய்யும் பொருட்டு சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக்குவதே இக்கல்லூரியின் தலையாய நோக்கமாகும்.
இக்கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பில் வணிகச் சட்டம் மற்றும் வரிச்சட்டங்கள் எனும் இரு துறைகளில் முதுநிலை சட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு முதுநிலை சட்டப் படிப்பு பயின்ற மாணவ மாணவியர்கள் எல்லா நிலைகளிலும் சிறப்புற விளங்குவதோடு நீதிபதிகள் பதவிகளையும் அலங்கரித்து வருகின்றனர். கோவை, அரசு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவர் சேர்க்கையில் சேர்ந்து பின்பு படிப்பை முடித்து வெளியே செல்லும் போது, சுற்றுச் சூழல் சட்டம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பாதுகாப்பு சட்டம் என்று ஒரு குறிப்பிட்ட சட்டத்தில் மட்டும் புலமை இல்லாது அத்துனை சட்டங்களிலும் திறமை மிக்கவர்களாக ஒரு முழுமையான வழக்கறிஞருக்கு உரித்தான தகுதிகள் அனைத்தையும் கொண்டதோடு நேர்மறை சிந்தனை மற்றும் விழுமியங்கள் கொண்டு சட்டத்தினால் சமுதாய மாற்றங்களை நிகழ்த்தி இந்த சமுதாயத்தை தலைசிறந்த சமுதாயமாக மாற்றி வருவதில் முதன்மை மிக்கவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
சட்டக் கல்வி இயக்ககத்தின் சீரிய உந்துததாலும், கோவை அரசு சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் தொடர் முயற்சியினாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் உழைப்பினாலும், எல்லாவற்றிற்கும் மேலாக சட்டக் கல்லூரி மாணவர்களின் அர்ப்பணிப்பு உணர்வினாலும் சட்டக் கல்வியில் உச்சகட்ட வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
Latest News
Dear candidates, LL.M cut off marks is published in https://admission.tndls.ac.in website. You can modify your preference of branch and college on or before 14-10-2023 using your registered login.
Click here to view – Cut off
Ugc guideliness of uniform span period n+2 directions issued permit to write the examination Click here to view details
Permitted to write the exam on the lines of UGC guidelines of uniform span period (N+2) – Directions issued by Registrar, TNDALU
Click here to view details
LL.M – 2022-2023- 2nd Counselling Cut off Mark
Click here to view details
RANK LIST – ADMISSION 2022-2023
Rank List for LL.M. Degree course : 2022-2023
Click here to view details ADMISSION NOTIFICATION 2022-2023 The LLM candidates can modify their preference of branch and college on or before 06/11/2022 for LLM admission 2022-2023…! Click here to login
Address
Government Law College,
Maruthamalai Main Road,
Bharathiyar University Post,
Coimbatore – 641046.